காங்கிரஸ், திமுக வேட்பாளர்களை ஆதரித்து டி.ஆர்.பாலு எம்பி பிரசாரம்

ஆலந்தூர்: ஆலந்தூர் மண்டலம் 165வது வார்டு காங்கிரஸ் வேட்பாளர் நாஞ்சில் ஈஸ்வர பிரசாத், 162வது வார்டு திமுக வேட்பாளர் சாலமோன், 163வது வார்டு திமுக வேட்பாளர் பூங்கொடி ஜெகதீஸ்வரன் ஆகியோரை ஆதரித்து டி.ஆர்.பாலு எம்பி, அமைச்சர் தா.மோ.அன்பரசன், ஆர்.எஸ்.பாரதி எம்பி ஆகியோர் தலைமையில் ஆதம்பாக்கத்தில் தேர்தல் பிரசார கூட்டம் நேற்று நடந்தது.அப்போது, டி.ஆர்.பாலு எம்பி பேசும்போது, `ஆலந்தூர் 165வது வார்டில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் நாஞ்சில் ஈஸ்வர பிரசாத், பூங்கொடி ஜெகதீஸ்வரன், சாலமோன் ஆகியோரை நீங்கள் வெற்றிபெற செய்தால் தமிழக அரசின் பல்வேறு திட்டங்களை உங்கள் பகுதிக்கு கொண்டுவர உறுதுணையாக இருப்பார்கள்.

ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், நகர மன்ற தலைவராக இருந்த ஆர்.எஸ்.பாரதி எம்பி ஆகியோர் இந்த பகுதிக்கு  பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற தந்துள்ளனர். மேலும் பாதாள சாக்கடை திட்டம், குடிநீர் திட்டம், சாலை வசதி, ரேஷன் கடைகள், தெருவிளக்குகள் உள்ளிட்ட வசதிகளை கொண்டுவந்துள்ளனர். இந்த பகுதி வளர்ச்சியடைய திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள்’ என்றார். இந்த கூட்டத்தில் ஆலந்தூர் பகுதி திமுக செயலாளர் பி.குணாளன், வட்ட செயலாளர்கள் வேலவன், ஜெகதீஸ்வரன், ஜி.ரமேஷ், லியோ பிரபாகரன், உதயகுமார், பூவராகவன், ஆர்.பாபு, கிறிஸ்டோபர், சரவணன், ராஜ்கு, கு.விஜயன், காங்கிரஸ் சார்பாக பகுதி தலைவர்கள் ஆதம் ரமேஷ், ஏ.வி.தனசேகரன், மாவட்ட துணை தலைவர்கள் பி.எஸ்.ராஜ், கோவிந்தராஜ், நேரு, ரோஜா, எஸ்.வடிவேல், ஐ.செல்வம், ஆதம்பிரகாஷ், சுரேஷ், ஸ்ரீராம், எஸ்.ரமேஷ், மகாராஜன், சி.கே.ஏழுமலை, மதிமுக சார்பாக கராத்தே பாபு, ஜி.திருநா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: