ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த 10 பேரை மாநில விசாரணை முகமை கைது செய்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் சமீபத்தில் மாநில விசாரணை முகமை (எஸ்ஐஏ) உருவாக்கப்பட்டது. இந்த முகமையானது தீவிரவாதம் மற்றும் பிரிவினைவாதத்துடன் தொடர்புடைய குற்றங்களை விசாரித்து வருகின்றது. இந்நிலையில், எஸ்ஐஏ அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பிற்கு ஆதரவாக ரகசியமாக செயல்பட்ட 10 பேரை அடையாளம் காணப்பட்டனர். இவர்கள் ஒருவரது நடவடிக்கை மற்றவர்கள் அறிந்திருக்கவில்லை.