லக்னோ: பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களிக்கவில்லை என்றால் அவர்களுடைய வீடுகள் ஜே.சி.பி. கொண்டு இடித்து தரைமட்டமாக்கப்படும் என அக்கட்சியின் எம்.எல்.ஏ. ஒருவர் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தின் கௌஷா மகர் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.-வான ராஜாசிங் பேசிய சர்ச்சைக்குரிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், உத்திரப்பிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களிக்காத வாக்காளர்களுக்கு அவர் மிரட்டல் விடுத்துள்ளார். உத்திரப்பிரதேச முதலமைச்சரான யோகி ஆதித்யநாத் ஆயிரக்கணக்கான ஜே.சி.பி. வாகனங்களை கொள்முதல் செய்து வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.