திருப்பத்தூர்: திருப்பத்தூர் நகராட்சியில் 36 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி நேற்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது: கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது ஒரு மேடையில் முன்னாள் முதல்வர் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ், முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி ஆகியோர் வாக்கு சேகரித்தனர். அப்போது எடப்பாடி வருவதற்கு ‘ஆசைக்கும், பேருக்கும், பதவிக்கும் ஊரார் கால் பிடிப்பார்’ என்ற பாடலை போட்டனர். அது அவருக்காக போடப்பட்ட ஆடியோ என்று கூட தெரியாமல் ரசித்தவர்தான் எடப்பாடி.
ஓபிஎஸ் மேடை ஏறி வரும்போது, அவருக்காக ஒரு பாடல் பாடியது. ‘குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் திருட்டு உலகமடா’ என அவருக்காக ஒரு பாடல் போட்டார்கள்.