பெரிய மருதும், சின்ன மருதும், வீர மங்கை வேலுநாச்சியாரும் உலவிய மண் திண்டுக்கல் மண்; முதல்வர் மு.க.ஸ்டாலின் பரப்புரை

சென்னை: பெரிய மருதும், சின்ன மருதும், ஹைதர் அலியும், திப்பு சுல்தானும், வீர மங்கை வேலுநாச்சியாரும் உலவிய மண் திண்டுக்கல் மண் என  உள்ளாட்சி தேர்தல் பரப்புரையில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சி மூலம் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். திண்டுக்கல் மாவட்டம் திமுகவின் கோட்டை என அவர் தெரிவித்துள்ளார். 2005-இல் மாநாட்டிற்காக திண்டுக்கல்லுக்கு வந்ததை மறக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories: