பெரியகுளம்: கொரோனாவால் ஓராண்டாக தடை விதிக்கப்பட்ட நிலையில், கும்பக்கரை அருவியில் குளிப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவி உள்ளது. கொரோனா இரண்டாம் அலை பரவலால் கடந்த ஆண்டு பிப்ரவரி முதல் இந்த அருவிக்கு செல்லவும், குளிக்கவு சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்தனர். இந்நிலையில் நோய் தொற்று குறைந்த நிலையில், தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து அனைத்து சுற்றுலாத் தலங்கள் மற்றும் அருவிகளில் சுற்றுலாப் பயணிகளை அனுமதித்து வருகின்றனர்.