நக்சல்களுடன் சண்டை சிஆர்பிஎப் அதிகாரி வீரமரணம்

ராய்ப்பூர்: சட்டீஸ்கர் மாநிலம், பிஜாப்பூர் மாவட்டம், பாசகுடா வன பகுதியில் ஒன்றிய ஆயுதப்படை போலீசார் (சிஆர்பிஎப்) நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த நக்சலைட்டுகள் திடீரென போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இருதரப்புக்கும் இடையே நடந்த கடும் துப்பாக்கி சண்டையில், சிஆர்பிஎப் படையின் உதவி கமாண்டர் சாந்திபூஷன் டிர்க்கி வீரமரணம் அடைந்தார். இது குறித்து போலீஸ் ஐஜி சுந்தர்ராஜ் கூறுகையில், ‘‘இந்த தாக்குதல் சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும், சம்பவ இடத்துக்கு போலீசார் அனுப்பப்பட்டுள்ளனர். அருகில் உள்ள பகுதிகளில்  நக்சலைட்டுகளை தேடும் பணி நடந்து வருகிறது. வீரமரணம் அடைந்த சாந்திபூஷன் டிர்க்கியின் உடல் அவரது சொந்த ஊருக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. படுகாயமடைந்த அப்பா ராவ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்,’’ என்றார்.

Related Stories: