மெல்போர்ன்: குவாட் அமைப்பினால், இந்தோ பசிபிக் பிராந்தியத்துக்கு நன்மையே கிடைக்கும் என்று ஒன்றிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார். ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் குவாட் அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கலந்து கொண்ட கூட்டத்தில் ஒன்றிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றார். இந்த கூட்டமைப்பு பற்றி கருத்து தெரிவித்த சீனா, தனது நாட்டின் வளர்ச்சியை தடுக்கவும், அமெரிக்காவின் மேலாதிக்கத்தை நிலைநாட்டுவதற்கும் தான் இந்த அமைப்பு பயன்படுத்தப்படுகிறது என்று குற்றம்சாட்டியது.