விருதுநகர்: ஆவினில் வேலை வாங்கி தருவதாக ரூ.3 கோடி மோசடி வழக்கில் கைதாகி ஜாமீனில் உள்ள அதிமுக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி சொந்த ஊரான திருத்தங்கலில் தங்கியுள்ளார்.
இந்நிலையில் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணைக்காக நேற்று காலை 11 மணிக்கு மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆஜரானார். அவரிடம் மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி கண்ணன், இன்ஸ்பெக்டர் கணேஷ்தாஸ் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை மதியம் 2 மணி வரை நடைபெற்றது. அருப்புக்கோட்டை ரோட்டில் உள்ள தனியார் விடுதியில் உணவருந்தி விட்டு 3 மணிக்கு வந்த ராஜேந்திர பாலாஜியிடம் இரவு 8 மணி வரை விசாரணை நடைபெற்றது.