பாஜவை பற்றி மக்களுக்கு தெரியும்: மாஜி அமைச்சர் செல்லூர் ராஜூ கிண்டல்

மதுரை: உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பிரசார பணிகளில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மும்முரமாக இருக்கிறார். மதுரையில் அவர் பேட்டியளிக்கையில், ‘‘அதிமுக ஜனநாயக முறைப்படியே நடக்கிறது. உழைப்பவர்களுக்கே சீட் வழங்கப்பட்டுள்ளது. அதிமுக விரைவில் தனது கைக்கு வரும் என்று சொன்னது சசிகலாவின் கருத்து. அது குறித்து அவரிடமே கேளுங்கள். ஒவ்வொரு இயக்க தலைவர்களும் தொண்டர்களை உற்சாகப்படுத்த, எதையாவது பல தகவல்களை சொல்வார்கள். அதுபோலதான், பாஜ மாநில தலைவரும் சொல்லி உள்ளார். பாஜவின் அளவுகோல் அவருக்கும் தெரியும். மக்களுக்கும் தெரியும். மதுரையின் மேயர் பதவியை பாஜ ஒருபோதும் கைப்பற்ற முடியாது’’ என்றார்.

Related Stories: