வண்டலூர்: வண்டலூர் உயிரியல் பூங்காவில் அரிய வகை அணில், குரங்குகள் திருடப்பட்டுள்ளது உயிரியல் பூங்காவில் பாதுகாப்பு கேள்விகுறியாக்கியுள்ளது. சென்னையை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்காவில் 2 நாட்களுக்கு முன்பாக அரிய வகை அணில், இருந்த கூண்டின் கம்பிகள் வெட்டப்பட்டு ஒரு ஜோடி குரங்குகள் திருடப்பட்டுள்ளன. இதையடுத்து பூங்கா அதிகாரிகள் போலீசாரிடம் புகார் அளித்த நிலையில் சிசிடிவி பதிவுகளைக் கொண்டு போலீசார் விசாாணை நடத்தி வருகின்றனர். தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த நீண்ட வாலை பெற்றுள்ள அணில், குரங்கு தொல்பட்டை வரை வாலை உயர்த்தும் தன்மை கொண்டதால் காண்போரை வசிகரிக்கும் தோற்றம் கொண்டதாக விலங்குகிறது.