கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சியில் குடிநீர் விநியோகம் சீராக இல்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். கோவை மாவட்டத்தில் உள்ள 7 நகராட்சிகளில் ஒன்றான மேட்டுப்பாளையத்தில் 33 வார்டுகள் உள்ளன. வற்றாத ஜீவ நதியான பவானி ஆறு இப்பகுதி வழியாக ஓடி வருகின்ற போதிலும், குடிநீர் விநியோகம் சரிவர நடைபெறுவதில்லை என பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும், துப்புரவு பணியாளர்கள் போதிய எண்ணிக்கையில் இல்லை என்பதால் பல்வேறு இடங்களில் குப்பைகள் தேங்கி கிடப்பதாகவும் கூறுகின்றனர். சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகள் போக்குவரத்துக்கு பெரும் இடையூறாக இருப்பதால், இப்பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்றும் மேட்டுப்பாளையம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.