இதை கவனத்தில் கொண்டு, பயணிகளின் வருகையை முறைப்படுத்தும் வகையில் ஊட்டி மற்றும் கொடைக்கானல் பகுதிகளுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் தங்களுடைய விவரங்களையும், பயணிக்கும் வாகனங்களின் எண்களையும், அவர்கள் வரும் நாள், தங்கும் கால அளவு, தங்கும் இடம் ஆகிய விவரங்களை முன்கூட்டியே இணையதளத்தின் மூலமாக தெரிவித்து, ‘இ-பாஸ்’ பெற்று, அதன் அடிப்படையில் வாகனங்களும் சுற்றுலா பயணிகளுக்கும் குறிப்பிட்ட அளவிலேயே அனுமதிக்கப்பட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
அதன்படி இன்று (7ம் தேதி) முதல் ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு வருவதற்கு இ-பாஸ் பதிவு அவசியம் என்று தமிழ்நாடு அரசு நேற்று முன்தினம் அறிவித்து, அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதன்படி, ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்ல இ-பாஸ் பதிவு நேற்று காலை 6 மணிக்கு தொடங்கியது. இ-பாஸ் பெறுவதற்கு சுற்றுலா பயணிகள் மற்றும் வணிக ரீதியாக வருபவர்கள் ‘epass.tnega.org’ என்ற இணைய முகவரியில் பதிவு செய்து மிக எளிதாக இ-பாஸ் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்றும், வாகனங்களை கட்டுப்படுத்தும் வகையில் தான் இ-பாஸ் முறை இருக்கும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நடைமுறை அடுத்த மாதம் (ஜூன்) 30ம் தேதி வரையில் மட்டுமே நடைமுறையில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
The post ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் விண்ணப்ப பதிவு தொடங்கியது: ஜூன் 30ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் appeared first on Dinakaran.