மனாஜரி : மடகாஸ்கரை தாக்கிய பத்சிராய் சூறாவளி வீடுகள், கட்டிடங்களை சின்னாபின்னாமாக்கி இருக்கும் நிலையில், ஆயிரக்கணக்கான விளை நிலங்களை முற்றிலும் அழித்து இருக்கிறது. மடகாஸ்கர் நாட்டில் கிழக்கு கடற்கரை நகரங்களை பத்சிராய் சூறாவளி தாக்கியது. மரங்கள், மின்கம்பங்கள், செல்போன் கோபுரங்களை பிடுங்கி எரிந்த இந்த சூறாவளி 3000த்திற்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் கட்டிடங்களை தரைமட்டம் ஆக்கிவிட்டது. பத்சிராய் சூறாவளிக்கு இதுவரை 20 பேர் உயிரிழந்து இருப்பதாகவும் 1 ;லட்சம் வீடுகள், உடைமைகளை இழந்து இருப்பதாகவும் மடகாஸ்கர் பேரிடர் மேலாண்மை துறை தெரிவித்துள்ளது.