ஆம்பூர்: ஆம்பூர் அருகே வீட்டருகே திரிந்த நாகப்பாம்பை பெண் ஒருவர் கையால் பிடித்து டப்பாவில் அடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆம்பூர் அருகே குமாரமங்கலம் ஊராட்சியில் புதுமனை 2வது தெருவில் வசித்து வருபவர் கற்பகம். இவரது வீட்டருகே 5 அடி நீள நாகப்பாம்பு ஒன்று நேற்று சுற்றி திரிந்தது. இதைக் கண்ட கற்பகத்தின் தங்கை சுமதி அந்த 5 அடி நீள நாகப்பாம்பை துரத்தி கையால் பிடித்தார். பின்னர் பிடிபட்ட நாகப்பாம்பை ஒரு டப்பாவில் போட்டு மூடினார்.