பெத்தேல் நகர் புறம்போக்கு இடத்தை காலி செய்வதாக உறுதியளிக்கும் மக்களுக்கு மாற்று இடம்!: ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்..!!

சென்னை: சென்னையில் பெத்தேல் நகர் புறம்போக்கு இடத்தை காலி செய்வதாக உறுதியளிக்கும் மக்களுக்கு மாற்று இடம் வழங்குவது பற்றி பரிசீலிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. பெத்தேல் நகரில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எதிரான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் அளித்துள்ளது. பெத்தேல் நகர் குடியிருப்போர் நல சங்க தலைவர் அண்ணாதுரை வழக்கு பிப்ரவரி 9ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.

Related Stories: