குன்றத்தூர்: மாங்காட்டில் தந்தையை அடித்து காயப்படுத்தியவர்களை சரமாரியாக தாக்கிய மகன், மருமகன் கைது செய்யப்பட்டுள்ளனர். மாங்காடு, சீனிவாச நகரை பகுதியை சேர்ந்தவர் முருகன் (49). சென்னை அண்ணாசாலையில் உள்ள ஆங்கில நாளிதழ் அலுவலகத்தில் ஊழியராக பணி புரிகிறார். நேற்று முன்தினம் இரவு முருகன், வேலை முடிந்து மெபட்டில் வீட்டுக்கு புறப்பட்டார். மாங்காடு, நெல்லித்தோப்பு மெயின் ரோட்டில் சென்றபோது, அதே பகுதியை சேர்ந்த செல்வகுமார் (45), சற்குணன் (45) ஆகியோர் சிமென்ட் மூலம் வேகத்தடை அமைத்து கொண்டிருந்தனர். அதை கவனிக்காமல் சென்ற முருகன், வேகத்தடை மீது மெபட்டை ஏற்றி இறக்கினார். இதனால், வேகத்தடை சேதமடைந்தது. இதனால் ஆத்திரமடைந்த செல்வக்குமார், சற்குணம் ஆகியோர், முருகனிடம் தகராறு செய்தனர். அதில் வாக்குவாதம் முற்றி, இருவரும் சேர்ந்து முருகனை சரமாரியாக தாக்கினர்.