லக்னோ : பாஜக கட்சியில் சமீபத்தில் இணைந்த முலாயம் சிங்கின் மருமகளுக்கு உத்தரப் பிரதேச தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. சமாஜ்வாதி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங்கின் இளைய மருமகளான அபர்ணா யாதவ், கடந்த 19ம் தேதி பாஜகவிற்கு தாவினார். எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் லக்னோ கண்டோன்மென்ட் தொகுதியில் அபர்ணாவை பாஜக களமிறக்கும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் லக்னோவில் உள்ள 9 சட்டப்பேரவைக்கான பாஜக வேட்பாளர் பட்டியலில் அபர்ணா யாதவின் பெயர் இடம் பெறவில்லை. லக்னோ கண்டோன்மென்ட் தொகுதியில் அபர்ணாவுக்கு வாய்ப்பு மறுத்துள்ள பாஜக, அங்கு வேறு ஒருவரை நிறுத்தியுள்ளது.