மனைவியை பிரிந்த பிறகு நடிகையை காதலிக்கிறார் ஹிரித்திக் ரோஷன்

மும்பை: நடிகர் ஹிரித்திக் ரோஷன், இளம்பெண் ஒருவரின் கையை பிடித்து ஓட்டலில் இருந்து வெளியே வந்தது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிரபல பாலிவுட் நடிகர் ஹிரித்திக் ரோஷன் - சூசன் கான் தம்பதி, திருமணமாகி 14 ஆண்டுகள் கழித்து கடந்த 2014ம் ஆண்டு விவாகரத்து பெற்றுக் கொண்டனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், சமீபத்தில் மும்பையில் இருக்கும் உணவகம் ஒன்றில் இருந்து வெளியே வந்த ஹிரித்திக் ரோஷன், ஒரு பெண்ணின் கையை பிடித்தபடி காரில் ஏறிச் சென்றார். இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. ஹிரித்திக்குடன் சென்ற பெண் யார் என்ற கேள்வி பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டது.

ஆளாளுக்கு ஒரு கருத்து தெரிவித்த நிலையில், ஹிரித்திக்குடன் சென்றது வளர்ந்து வரும் நடிகையும், இசையமைப்பாளருமான சபா ஆசாத் (32) என்பது தெரிந்தது. இவர் தில் கபடி இந்தி படம் மூலம் 2008ம் ஆண்டு பாலிவுட்டில் அறிமுகமானவர். அவர் இதுவரை 5 படங்களில் நடித்திருக்கிறார். இது குறித்து பாலிவுட் வட்டாரங்கள் கூறுகையில், ‘ஹிரித்திக் ரோஷன் கடந்த சில மாதமாகவே சபா ஆசாத்தை காதலித்து வருகிறார். வெளியுலகத்திற்கு தெரியாமல் இருவரும் பார்த்துக் கொண்டனர். தற்போது அவர் தனது காதலியை அறிமுகம் செய்து வைக்க தயாராகி விட்டார்.

இருவரும் உணவகத்துக்கு வந்தது மீடியாவுக்கு தெரிந்ததும் இந்த காதல் வெளியே தெரிந்துள்ளது’ என்றன. விவாகரத்தாகி பல ஆண்டுகளாக ஹிரித்திக் சிங்கிளாகவே இருக்கிறாரே என்று அவரது ரசிகர்கள் வருத்தப்பட்ட நிலையில், தற்போது மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதற்கு முன் இமாத் ஷா என்பவரை சபா ஆசாத் காதலித்து வந்துள்ளார். அந்த காதல் முறிந்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் ஒருபக்கம் ஓடிக் கொண்டிருக்க, ஹிரித்திக்கை பிரிந்த சூசன் கான், நடிகர் அர்ஸ்லான் கோனியை காதலித்து வருகிறார்.

Related Stories: