திருவள்ளூர்: சென்னை மண்டல விதை ஆய்வு துணை இயக்குனர் ரவீந்திரா வௌியிட்ட செய்திக்குறிப்பு: உரிமம் பெறாமலும், விற்பனை பட்டியல் இல்லாமலும், விதை விவர அட்டை இல்லாமலும், விதை சட்ட நடைமுறையை பின்பற்றாமலும், வாட்ஸ்அப், இணையதளம் வாயிலாக விற்பனை செய்யும் விதைகளை, விவசாயிகள் யாரும் வாங்க வேண்டாம். விவசாயிகள், விதையினை, அரசு உரிமம் பெற்ற விதை விற்பனை நிலையங்களில் மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும்.