விக்கிரவாண்டி அருகே 5 ஓட்டல்களில் அரசு பேருந்துகள் உணவுக்காக நிறுத்த தடை: அமைச்சர் ராஜகண்ணப்பன் உத்தரவு

சென்னை: விக்கிரவாண்டி அருகே 5 ஓட்டல்களில் அரசு பேருந்துகள் உணவுக்காக நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். அண்ணா, உதயா, வேல்ஸ், ஹில்டா மற்றும் அரிஸ்டோ உணவகங்களில் அரசு பேருந்துகள் நிற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

 5 உணவகங்களிலும் சுகாதாரமற்ற உணவுகள் மற்றும் அதிக விலை வசூலிக்கப்படுவதாகா எழுந்த புகாரின் பேரின் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நேற்று தரமற்ற உணவு வழங்கிய மாமண்டூர் பயண வழி உணவகத்தில், அரசு பேருந்துகள் நின்று செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.

Related Stories: