தாவரவியல் பூங்காவில் புல் மைதானத்தை பாதுகாக்க பாப் அப் முறையில் தண்ணீர் தெளிப்பு

ஊட்டி : உறைபனியில் இருந்து புல்வெளிகளை காக்கும் பொருட்டு ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா புல் மைதானத்தில் பாப் அப் முறையில் தண்ணீர் பாய்ச்சப்பட்டு வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் நவம்பர் மாத இறுதி அல்லது டிசம்பர் மாத துவக்கத்தில் பனிப்பொழிவு துவங்கும். ஆரம்பத்தில் நீர்பனிபொழிவாகவும், தொடர்ந்து உறைபனி பொழிவும் துவங்கும். இதன் காரணமாக தேயிலை செடிகள், வனங்களில் செடி கொடிகள், புற்கள் கருகி காய்ந்து விடும். இம்முறை பனிப்பொழிவு சற்று தாமதமாக டிசம்பர் இரண்டாவது வாரத்தில் துவங்கியது. ஆரம்பம் முதலே உறைபனிப்பொழிவு கொட்டியது. இதனை பார்ப்பதற்கு வெள்ளை கம்பளம் விரித்தது போல் காணப்பட்டது. இதனிடையே இம்மாத துவக்கத்தில் சில நாட்கள் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு மழை பெய்தது. மேலும் மேகமூட்டமான காலநிலையும் நிலவியது.

இதன் காரணமாக பனியின் தாக்கம் குறைந்து காணப்பட்டது. தற்போது மழை முற்றிலும் குறைந்த நிலையில் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் அதிகாலை நேரங்களில் தாவரவியல் பூங்கா மைதானம், குதிரை பந்தய மைதானம் உள்ளிட்ட இடங்களில் உறைபனி கொட்டி கிடக்கின்றன.

ஊட்டி தாவரவியல் பூங்காவில் உள்ள புல் மைதானத்தில் உறைபனி கொட்டி கிடப்பதால் புல்வெளிகள் பாதிப்படையும் நிலை இருந்தது. இதனை தொடர்ந்து நாள்ேதாறும் காலை, மாலை வேைளகளில் புல் மைதானங்களில் பாப் அப் முறையில் தண்ணீர் தெளிக்கப்பட்டு வருகிறது.மேலும் பூங்காவில் உள்ள அலங்கார செடிகள் போன்றவைகளை பாதுகாக்கும் பொருட்டு தாகைகள் கொண்டு பாதுகாப்பு செய்யப்பட்டு வருகின்றன.

Related Stories: