திருவையாறில் தியாகராஜர் 175வது ஆராதனை விழா பஞ்சரத்ன கீர்த்தனை பாடி இசை கலைஞர்கள் அஞ்சலி

திருவையாறு: தஞ்சை மாவட்டம் திருவையாறில் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜரின் 175வது ஆராதனை விழா நேற்று நடந்தது. இதையொட்டி தியாகராஜர் நினைவிடத்தில் 9 மணி முதல் 10 மணி வரை பஞ்சரத்ன கீர்த்தனை நடைபெற்றது. இதில் பிரபல இசை கலைஞர்கள் சுதா ரகுநாதன், மஹதி, ஓ.எஸ்.அருண், அரித்துவாரமங்கலம் ஏ.கே.பழனிவேல், பிரபஞ்சம் பாலசந்திரன், முஷ்ணம் ராஜாராவ் என 50 கர்நாடக இசைக்கலைஞர்கள், பாடகர்கள் கலந்து கொண்டு சமூக இடைவெளியுடன் அமர்ந்து பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடி தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்தினர்.

கொரோனாவால் குறைவான கலைஞர்களே வந்திருந்தனர். அதேபோல் பார்வையாளர்களும் அனுமதிக்கப்படவில்லை. இதன்பின் சிறப்பு பூஜையுடன் விழா நிறைவடைந்தது. விழாவில் தியாக பிரம்ம மகோத்சவ சபை தலைவர் ஜி.கே.வாசன், அறங்காவலர்கள் சுரேஷ் மூப்பனார், சந்திரசேகர மூப்பனார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: