திருவையாறு: தஞ்சை மாவட்டம் திருவையாறில் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜரின் 175வது ஆராதனை விழா நேற்று நடந்தது. இதையொட்டி தியாகராஜர் நினைவிடத்தில் 9 மணி முதல் 10 மணி வரை பஞ்சரத்ன கீர்த்தனை நடைபெற்றது. இதில் பிரபல இசை கலைஞர்கள் சுதா ரகுநாதன், மஹதி, ஓ.எஸ்.அருண், அரித்துவாரமங்கலம் ஏ.கே.பழனிவேல், பிரபஞ்சம் பாலசந்திரன், முஷ்ணம் ராஜாராவ் என 50 கர்நாடக இசைக்கலைஞர்கள், பாடகர்கள் கலந்து கொண்டு சமூக இடைவெளியுடன் அமர்ந்து பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடி தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்தினர்.