டெல்லி: 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பேரணி நடத்த விதிக்கப்பட்ட தடை ஜன.31 வரை நீட்டித்து தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கொரோனா காரணமாக 22-ம் தேதி வரை தடை இருந்த நிலையில் தற்போது ஜன.31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. உ.பி. பஞ்சாப், கோவா, உத்தராகண்ட், மணிப்பூர் மாநில சட்டப்பேரவை தேர்தலையொட்டி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பொதுக்கூட்டங்களில் 500 பேர் வரை பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வீடுவீடாக பிரசாரம் மேற்கொள்வதற்கு 10 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட், மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களுக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. வரும் பிப்ரவரி 10-ம் தேதி தேர்தல் தொடங்கி மார்ச் 7-ம் தேதிவரை தேர்தல் நடைபெற உள்ளது. கோவா, உத்தரகாண்ட், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.