கோயில் நிலத்துக்கான வாடகை நிலுவை ரூ.13.39 லட்சத்தை செலுத்த சேலம் மேச்சேரி பேரூராட்சிக்கு உத்தரவு..!!

சென்னை: கோயில் நிலத்துக்கான வாடகை நிலுவை ரூ.13.39 லட்சத்தை செலுத்த சேலம் மேச்சேரி பேரூராட்சிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 2 வாரங்களில் வாடகை நிலுவையை பசுபதீஸ்வரர் கோயில் நிர்வாகத்துக்கு செலுத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குத்தகை நிலத்தில் உள்ள கடைகள் மூலம் வாடகை வருவாய் ஈட்டும் பேரூராட்சி வாடகை நிலுவையை செலுத்த வேண்டும். வாடகையை செலுத்தாவிடில் கோயில் நிலம் ஆக்கிரமிப்பாக கருதி சட்டப்படி நடவடிக்கை எடுக்க அனுமதியளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: