பரமக்குடி : பரமக்குடி வைகை ஆற்றில் உடைந்த பாலத்தை உயிர்ப்பலி ஏற்படுவதற்கு முன்பு சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பரமக்குடியில் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு பழைய ஆற்றுப்பாலம் இடிக்கப்பட்டு புதிய மேம்பாலம் கட்டப்பட்டது. அப்போது போக்குவரத்திற்காக தற்காலிகமாக தரைப்பாலம் கட்டப்பட்டது. தொடர்ந்து, புதிய ஆற்றுப் பாலம் திறக்கப்பட்ட நிலையிலும், தரைப்பாலத்தை போக்குவரத்துக்கு தொடர்ந்து பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாலம் சேதமடைந்து வாகனங்கள் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு வந்தனர்.