கச்சத்தீவு : தமிழ்நாட்டு மீனவர்கள் மீது மீண்டும் அத்துமீறி இலங்கை கடற்படையினர் நடத்திய தாக்குதலில் விசைப் படகு ஒன்று கடலில் மூழ்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்துவதும் அவர்களது வலைகள், படகுகளை சேதப்படுத்துவதும் தொடர்கதையாக உள்ளது. இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று மீனவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.