கந்தர்வகோட்டை : கந்தர்வகோட்டையில் சம்பா அறுவடைக்கு பயிர்கள் தயாராக உள்ளதால் மயில்கள் கூட்டத்திடமிருந்து பயிர்களை பாதுகாக்க வரப்போரம் விவசாயிகள் சேலை கட்டி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை பகுதிகளில் வடகிழக்கு பருவமழையும், அதனைத் தொடர்ந்து பெய்த தொடர் மழையால் விவசாயிகள் நல்ல முறையில் விவசாயம் செய்து வருகிறார்கள். இதில் ஒரு சிலர் பிந்தைய நடவு செய்ததால் கதிர் பரிந்து நெல் முற்றிய நிலையில் அறுவடைக்கு தயாராக உள்ளது.