சென்னை: மாநில திட்டக்குழுவின் ஆய்வுக்கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. வரும் மார்ச் மாதம் தமிழகத்தில் சட்டமன்றத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த நிதிநிலை அறிக்கையில் என்ன மாதிரியான திட்டங்கள் இடம்பெறுவது குறித்தும் பல்வேறு விசயங்கள் குறித்தும் முதலமைச்சர் தலைமையில் இந்த ஆலோசனை கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த திட்டக்குழுவின் துணைத்தலைவராக பேராசிரியர் ஜெயரஞ்சன் இருக்கிறார். பேராசிரியர்கள் ராம சீனிவாசன் உள்ளிட்ட உறுப்பினர்கள், பொருளாதார வல்லுநர்கள் சுல்தான் அகமது இஸ்மாயில் சுற்றுச்சூழல் ஆர்வலர், முன்னாள் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி தீனபங்கு, சட்டப்பேரவை உறுப்பினர் டிஆர்பி ராஜா, மல்லிகா சீனிவாசன், மருத்துவர்கள் சிவராமன் உள்ளிட்டோர் உள்ள இந்த மாநில திட்டக்குழு அவ்வப்போது கூடி மாநிலத்தில் அடுத்தகட்ட திட்டங்கள் குறித்து ஆலோசித்து வருகின்றனர். தமிழகத்தின் நிதிநிலைமை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனை மீட்பதற்கான வழிமுறைகள், தொழில் வளர்ச்சிகள் கொண்டுவருவது குறித்து ஆலோசிக்கப்படும்.