திருப்பூர்: கடந்த வாரம் பஞ்சாப் சென்ற பிரதமர் மோடி பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக மேம்பாலத்தின் மீது 20 நிமிடங்கள் காத்திருந்து பிறகு பயணத்தை ரத்து செய்தனர். இதனை கண்டிக்கும் விதமாக இன்று திருப்பூர் மாவட்டம் பல்லடம் பேருந்து நிலையம் அருகே பா.ஜ.க சார்பில் மனிதசங்கலி ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது ஆர்ப்பாட்டத்தின் போது சாலையோர தள்ளுவண்டி வியாபாரியை பாஜகவினர் தாக்கினர். தாக்குதலில் ஈடுபட்ட பா.ஜ.க வினரை தடுத்த காவல்துறையினர் , இரு தரப்பினரையும் காவல்நிலையம் அழைத்து சென்று விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.