தேவகோட்டை: பழநி பாலதண்டாயுதபாணி கோயிலுக்கு வருகின்ற 18ம் தேதி தைப்பூசத்தை முன்னிட்டு, முருக பக்தர்கள் காவடி எடுத்து பாதயாத்திரையாக செல்வது வழக்கம். பல நூற்றாண்டு காலமாக தேவகோட்டையில் இருந்து நகரத்தார்கள் மற்றும் பலரும் காவடிகள் ஏந்தி பழநிக்கு பாதயாத்திரை மேற்கொண்டனர். தேவகோட்டை நகரப்பள்ளிக்கூடத்தில் இருந்து நேற்று மாலை 15 காவடிகள் அரோகரா பாடி புறப்பட்டன.