மும்பை: ஐ.பி.எல். போட்டிகளுக்கான டைட்டில் ஸ்பான்சர் உரிமத்தை டாடா குழுமம் கைப்பற்றியுள்ளது. இந்த தகவலை உறுதிப்படுத்திய ஐ.பி.எல். தலைவர் பிரிஜேஷ் பட்டேல், சீனாவை சேர்ந்த விவோ நிறுவனம் விலகியதால் டாடா குழுமம் டைட்டில் ஸ்பான்சராக செயல்படும் என்று தெரிவித்துள்ளார். மும்பையில் இன்று நடைபெற்ற பி.சி.சி.ஐ. பொதுக்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. விவோ நிறுவனம் 2018 முதல் 2022 வரை ஐ.பி.எல். போட்டியின் விளம்பர தாரராக செயல்பட 2,200 கோடி ரூபாய்க்கு பி.சி.சி.ஐ. உடன் ஒப்பந்தம் செய்திருந்தது.