தேனி: வேட்புமனு தாக்கலில் விவரங்களை மறைத்ததாக ஓபிஎஸ், அவரது மகனான தேனி தொகுதி எம்பி ரவீந்திரநாத் ஆகியோர் மீதான வழக்குப்பதிவு ஆவணங்கள் சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று சமர்ப்பிக்கப்பட்டது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வேட்பு மனுத்தாக்கலில் விபரங்களை மறைத்துள்ளது குறித்து வழக்குபதிவு செய்ய, தேனி மாவட்ட திமுக இளைஞரணி முன்னாள் அமைப்பாளர் மிலானி மனுவின் அடிப்படையில் தேனி ஜூடிசியல் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி நேற்று முன்தினம் ஓபிஎஸ் மற்றும் தேனி எம்பி ஆகியோர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 125-ஏ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.