தேனி: தேனி மாவட்டம் பெரியகுளத்தில் ரசாயனம் தடவி விற்கப்பட்ட 200 கிலோ மீன்களை அரசு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். பெரியகுளம் பகுதியில் மீன்கள் விற்கப்படும் இடங்களில் மீன்வளத்துறை மற்றும் உணவு பாதுகாப்புத் துறையினர் இன்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அனைத்து மீன் கடைகளிலும் விற்கப்படும் மீன்களில் உடலை பதப்படுத்த பயன்படுத்தப் ஃபார்மலின் என்ற ரசாயனம் கலந்திருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து சுமார் 200 கிலோ மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.