விருதுநகர் : விருதுநகர் பாவாலி ரோட்டில் துணைமின்நிலையம் மற்றும் ஊழியர்கள் குடியிருப்புகள் உள்ளன. ஊழியர் குடியிருப்பு இடிந்து விழும் நிலையால் வீடுகள் மூடி கிடக்கின்றன. துணைமின்நிலைய பின்பகுதியில் பர்மா காலனியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. துணைமின்நிலைய வளாகத்தின் பின்புற சுற்றுச்சுவர் மழையால் 75 அடி தூரத்திற்கு இடிந்து துணைமின்நிலைய வளாகத்திற்குள் விழுந்து கிடக்கிறது. மின்நிலைய வளாகத்தின் உள்பகுதி புதர் மண்டி கிடப்பதால், அவற்றில் வசிக்கும் பாம்புகள் பின்பகுதியில் உள்ள பர்மா காலனி குடியிருப்புகளுக்குள் வந்து விடுகிறது. கடந்த 3 நாட்களில் இருவரை பாம்புகள் கடித்துள்ளன.