தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை: தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் எம்பிக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டார். அதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. மருத்துவரின் ஆலோசனைப்படி அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘ கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து டாக்டர்கள் ஆலோசனைப்படி தனிமைப்படுத்தி கொண்டுள்ளேன்’’என்று தெரிவித்துள்ளார். கடந்த வாரம்பேரவை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக திருநாவுக்கரசர் மகனும், அறந்தாங்கி தொகுதி எம்எல்ஏவுமான எஸ்.டி.ராமச்சந்திரன் கொரோனா பரிசோதனை மேற்கொண்ட போது, அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதனால் அவர் தனிமைப்படுத்தி கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: