கடலில் மூழ்கிய விசைப்படகு 6 மீனவர்கள் உயிர் தப்பினர்

சென்னை: புதுவண்ணாரப்பேட்டை அண்ணா நகரை சேர்ந்த செல்வம் (47) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில், காசிமேடு பகுதியை சேர்ந்த செல்வம் தலைமையில் ஜெயக்குமார், அருண், ஜெகநாதன், செந்தில், செல்வம் உள்பட 6 பேர், கடந்த 7ம் தேதி காசிமேடு துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இவர்கள் எண்ணூர் அருகே சென்றபோது திடீரென படகில் ஓட்டை விழுந்து, நீரில்  மூழ்க ஆரம்பித்தது. இதனால், அதில் இருந்த மீனவர்கள் கடலில் குதித்து தத்தளித்தனர். அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த சக மீனவர்கள் இவர்களை மீட்டு படகு மூலம் காசிமேடு மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வந்து சேர்ந்தனர்.

Related Stories: