மெல்போர்ன்: நம்பர் ஒன் டென்னிஸ் வீரரான செர்பியாவின் ஜோகோவிச், வரும் 17ம்தேதி முதல் நடைபெற உள்ள ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்க மெல்போர்ன் சென்றுள்ளார். ஆனால் அவர் கொரோனா தடுப்பூசி போடாததால் அவரின் விசாவை ஆஸ்திரேலியா ரத்து செய்துள்ளது. இதனை எதிர்த்து ஜோகோவிச் தொடர்ந்துள்ள வழக்கு அந்நாட்டு நீதிமன்றத்தில் வரும் 10ம்தேதி விசாரணைக்கு வர உள்ளது. அதன் தீர்ப்பை பொறுத்துதான் அவர் ஆஸி. ஓபனில் விளையாட முடியும். அதனை எதிர்பார்த்து மெல்போர்ன் ஓட்டலில் அவர் தங்கி உள்ளார். அவருக்கு ஆதரவாக ரசிகர்கள் மெல்போர்ன் மற்றும் செர்பியாவில் போராட்டம் நடத்தினர்.