முசிறி : மண்ணச்சநல்லூர் அருகே தச்சன்குறிச்சி வனப்பகுதியில் ரூ.5 லட்சம் மதிப்பிலான 4,130 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து அதிலிருந்த மதுவை கீழே ஊற்றி அழித்தனர்.மண்ணச்சநல்லூர் அருகே இருங்களூரில் கடந்த ஜூலை 20ம் தேதி திருட்டுத்தனமாக மது விற்பனை நடைபெறுவதை கண்டறிந்த மதுவிலக்கு போலீசார் தீவிர சோதனை நடத்தி அப்பகுதியை சேர்ந்த லாரன்ஸ் என்பவரின் தோட்டத்தில் பதுக்கி வைத்து விற்பனை செய்த ரூ.5 லட்சம் மதிப்பிலான 4,130 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.