திருவாரூர் அருகே இந்திய கம்யூ. நிர்வாகி மகன் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

நீடாமங்கலம்: திருவாரூர் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகியின் மகன் கார் மீது, பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளராக இருந்த நடேச தமிழார்வன், கடந்த நவம்பர் 10ம் தேதி மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இவரது மகன் ஸ்டாலின்பாரதி. வழக்கறிஞரான இவர், நேற்றுமுன்தினம் காரில் நீடாமங்கலம் வந்து விட்டு பின்னர் இரவு ஒளிமதி கிராமத்திற்கு திரும்பி உள்ளார்.

அப்போது கற்கோயில் பாலத்தின் கீழ் கார் செல்லும் போது அங்கு பதுங்கியிருந்த மர்ம நபர்கள், கார் மீது பெட்ரோல் குண்டை வீசி விட்டு தப்பினர். இதுதொடர்பாக ஸ்டாலின்பாரதி கொடுத்த புகாரின் பேரில் நீடாமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Related Stories: