பிரேசிலியா: 214 பணியாளர்கள் மற்றும் பயணிகளுக்கு கொரோனா உறுதியானதால் சாண்டோஸ் துறைமுகத்தில் 5 கப்பல்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார ஒழுங்குமுறை அதிகாரி அன்விசா தெரிவித்தார். சுவிஸ் - இத்தாலிய இடையே இயக்கப்படும் கார்னிவல் கார்ப் நிறுவனத்திற்குச் சொந்தமான இரண்டு கப்பல்கள் தலா 3,000க்கும் மேற்பட்ட பயணிகளுடன் ரியோ டி ஜெனிரோ மற்றும் சாண்டோஸுக்கு சென்று கொண்டிருந்தன. சாண்டோஸுக்கு சென்ற கப்பலில் இருந்த பணியாளர்கள் 65 பேருக்கும், பயணிகள் 25 பேருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.