ஜம்முவில் 2 லஷ்கர் தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர், ஜன.5: ஜம்மு காஷ்மீரில் வீரர்கள்  நடத்திய என்கவுன்டரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.  ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் ஓகே கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து அங்கு விரைந்த வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பதுங்கி இருந்த தீவிரவாதிகள் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள்.

இதனையடுத்து வீரர்கள் கொடுத்த பதிலடியில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். என்கவுன்டரில் பலியான தீவிரவாதிகள் லஷ்கர் இ ெதாய்பா தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் கொல்லப்பட்ட இருவருக்கும் பல்வேறு தீவிரவாத சம்பவங்களில் தொடர்பு இருப்பதாகவும் காஷ்மீர் இன்ஸ்பெக்டர் ஜெனரல் விஜய்குமார் தெரிவித்துள்ளார்.

Related Stories: