கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த பைத்தந்துறை கிராமத்தை சேர்ந்தவர் சேகர் (எ) தொடுக்கு சேகர், சங்கராபுரம் அடுத்துள்ள பகுதியை சேர்ந்தவர் ஜோசப் (எ) நடுபையன். இவர்கள் இருவரும் சேர்ந்து 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 20 கேனில் 700 லிட்டர் எரிசாராயத்தை விற்பனைக்கு பைத்தந்துறை கிராம பகுதியில் பதுக்கி வைத்திருந்ததை கள்ளக்குறிச்சி மதுவிலக்கு போலீசார் கடந்த அக்டோபர் மாதம் கண்டுபிடித்து, எரிசாராயத்தை பறிமுதல் செய்து சேகர், ஜோசப் ஆகிய இருவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இவர்கள் 2 பேரும், குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.