கன்னியாகுமாரி: கன்னியாகுமாரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் உச்சத்தில் இருந்து வந்த மல்லிகை மற்றும் பிச்சிப் பூக்களின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. கன்னியாகுமாரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் கடந்த ஒரு மாத காலமாக பூக்களின் விலை உச்சத்தில் இருந்து வந்தது. இந்நிலையில் பூக்களின் விலை திடீரென வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த மாதம் வரை ரூ. 4,000- க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ மல்லிகைப் பூ தற்போது ரூ.800 ஆக விற்கப்டுகிறது.