சென்னை: சென்னையில் இருந்து அந்தமான் தீவுக்கு செல்லும் அனைவருக்கும் நாளை முதல் ஆர்.டி.பி.சி.ஆர். நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என்று உள்நாட்டு விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. ஒமிக்ரான் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 2 வயதுக்கு மேற்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் ஆர்.டி.பி.சி.ஆர். நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. நெகட்டிவ் சான்றிதழ்கள் இல்லாதவர்களுக்கு அந்தமான் செல்லும் 5 விமானங்களிலும் பயணம் செய்ய அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.