பெங்களூரு: கர்நாடகாவில் அரசு விழாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை முன்னிலையில் காங்கிரஸ் எம்.பி டி.கே.சுரேஷ், பாஜ அமைச்சர் அஸ்வத் நாராயண் ஆகியோர் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்டத்தில் அரசு சார்பில் அம்பேத்கர் மற்றும் கெம்பேகவுடா சிலை திறப்பு விழா நடந்தது. இதில் பெங்களூரு ஊரக தொகுதி காங்கிரஸ் எம்பி டி.கே. சுரேஷ் அழையா விருந்தாளியாக கலந்து கொண்டார். விழாவில் அமைச்சர் அஸ்வத் நாராயண் பேசுகையில் ‘ராம்நகரில் பாஜ எம்எல்ஏ இல்லை என்றாலும் வளர்ச்சி பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளோம்.