போபால்: மத்தியப்பிரதேசத்தில் பஞ்சாயத்து அமைப்பு தேர்தலில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இடஒதுக்கீடு கேட்டு முதலமைச்சர் சிவராஜ் சவுகான் இல்லம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போபால் நகரில் முதல்வர் வீடு முன்பு திரண்ட பிற்படுத்தப்பட்டோர் மகா சபா நிர்வாகிகள் மக்கள் தொகையில் 50%- ற்கு மேல் உள்ள பிற்படுத்தப்பட்டோருக்கு பஞ்சாயத்து அமைப்பில் உரிய இடஒதுக்கீடு வழங்க சட்டத்தில் திருத்தும் செய்ய வேண்டுமென்று முழக்கமிட்டனர். முதல்வர் வீடு முன்பு திரண்டவர்களை போலீசார் குண்டுகட்டாக தூக்கி கைது செய்தனர்.