மீரட்:உத்தர பிரதேச மாநிலத்தில், பிரமாண்டமான முறையில் ‘மேஜர் தயான் சந்த் விளையாட்டு பல்கலைக் கழகம்’ அமைக்கப்படுகிறது. இதற்கான அடிக்கல்லை நேற்று நாட்டிய பிரதமர் மோடி, பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசியதாவது: உத்தர பிரதேத்தில் முந்தைய ஆட்சிகளில் குற்றவாளிகள் விளையாடினார்கள். நில மாபியாக்கள் விளையாடினார்கள். பெண்கள் தெருக்களில் நடந்து சென்றால் பகிரங்கமாக கேலி, கிண்டல் செய்யப்பட்டனர். மீரட்டில் வசிக்கும் மக்களும், பிற பகுதியில் வாழ்பவர்களும் வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவத்தை மறந்திருக்க மாட்டார்கள். முந்தைய அரசு மாபியாக்களுக்கும், குற்றவாளிகளுக்கும் துணையாக இருந்தது. இந்த கொடுமைகளால் மக்கள் தங்கள் மூதாதையர்கள் வீடுகளில் வசிக்க முடியாமல் காலி செய்து கொண்டு வெளியேறினார்கள்.