இஸ்லாமாபாத்: இந்தியாவின் ரபேல் போர் விமானங்களுக்கு போட்டியாக, சீனாவிடம் இருந்து 25 அதிநவீன ஜே-10சி ரக போர் விமானங்களை பாகிஸ்தான் வாங்குகிறது. ராவல்பிண்டியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ஷேக் ரஷீத் அகமது, “அடுத்த ஆண்டு மார்ச் 23ம் தேதியன்று நடைபெறும் பாகிஸ்தான் தேசிய தின நிகழ்ச்சியில், சீனாவின் 25 ஜே-10சி ரக போர் விமானங்கள் இடம்பெறும்,’’ என தெரிவித்தார்.