புதுடெல்லி: அருணாச்சல பிரதேசம் தனக்கு சொந்தமான பகுதி என சீனா தொடர்ந்து உரிமை கோரி வருகிறது. அங்கு இந்திய தலைவர்கள் சென்றால் எதிர்ப்பு தெரிவிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறது. மேலும், இந்த மாநிலத்தின் எல்லையில் ஏற்கனவே சில பகுதிகளை சீன ராணுவம் ஆக்கிரமித்து புதிய கிராமங்களை அமைத்து வருகிறது. இந்நிலையில், அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 15 பகுதிகளுக்கு சீனா புதிய பெயர்களை சூட்டி, அறிவிப்பு வெளியிட்டுள்ளது.